இலங்கையின் வாகனத்துறையானது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் காரணமாக பாரிய பின்னடைவைச் சந்திக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற புதிய வாகன அறிமுக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கியா மோட்டார்ஸ் லங்கா (Kia Motors Lanka) நிறுவனத்தின் தலைவர் மகேன் தம்பையா இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 310 இலிருந்து 320 ஆக அதிகரித்துள்ளதால், வாகன இறக்குமதி விலைகள் பெருமளவு உயரும்.
