நடிகை திரிஷா திரையுலகை விட்டு விலகப்போவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த தகவல்களை அவர் முற்றாக மறுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, நடிகை திரிஷா ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்யப் போவதாகவும், அதன் காரணமாக அவர் சினிமாவில் இருந்து நிரந்தரமாக விலக முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ள திரிஷா, தான் திரைத்துறையை விட்டு விலகப்போவதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகள் எனத் தெரிவித்துள்ளார்.
பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்யப் போவதாகவும், அதனால் நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாகவும் வெளியான தகவல்களில் உண்மை இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளையும், உண்மைக்குப் புறம்பான வதந்திகளையும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது பல முன்னணித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் திரிஷா, தனது திரைப்பயணம் தொடரும் என்பதையும் இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
