Top News

மதுபான பிரியர்களுக்கு சற்றுமுன் வெளியான கவலையான செய்தி

 

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாடு முழுவதும் இரண்டு நாட்கள் மதுபானசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் வரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஒப்புதலுடன் செயல்படுத்தப்படும் இந்த உத்தரவின்படி, மதுபானம் விற்பனை செய்ய உரிமம்பெற்ற அனைத்து இடங்களும் இரண்டு நாட்களும் மூடப்பட வேண்டும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

நாட்டுப்புற மதுக்கடைகள், மதுபானக் கடைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் (மதுபானம் விற்பவை), உணவகங்கள். உரிமம் பெற்ற எவரேனும் இந்த உத்தரவை மீறி புத்தாண்டு நாட்களில் மதுபானம் விற்றால், அவர்கள் மீது கலால் வரிச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post