தற்போது நடைமுறையில் உள்ள மாதாந்த மறுஆய்வு முறைக்குப் பதிலாக, உலக எண்ணெய் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் பலமுறை எரிபொருள் விலைத் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு புதிய எரிபொருள் விலை நிர்ணய முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இது மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாராந்த அடிப்படையில் திருத்தங்களைக் கருத்தில் கொள்ளும் சாத்தியக்கூறுடன் விலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்
ஒரு வாரத்தில் உலக விலைகள் குறைந்தால், இலங்கை அதற்கேற்ப விலைகளைச் சரிசெய்யும். அதேபோல், அடுத்த வாரம் விலைகள் உயர்ந்தால், உள்ளூர் விலைகளும் அதிகரிக்கப்படும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து உலக எண்ணெய் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கைக்கான நான்காண்டு நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மறுஆய்வுகள் குறித்த பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை கடந்த வியாழக்கிழமை சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது.
மிகவும் நலிவடைந்தவர்களுக்கு உதவும் அதே வேளையில், செலவு மீட்பு எரிபொருள் மற்றும் மின்சார விலை நிர்ணயத்தை செயல்படுத்துவதைப் பொறுத்தே சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிப்பு அமையும் என்று கூறியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி அபாயங்களைக் குறைப்பதற்கும் நிதி ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
