Top News

எரிபொருள் விநியோகம் தொடர்பில் சீனா தூதுவர் மக்களுக்கு வெளியிடப்பட்ட மகிழ்ச்சி அறிவிப்பு

 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எக்காலத்திலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷென்ஹொங் தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் கூறியதாவது,
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக சில நாடுகள் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும், இலங்கையில் அத்தகைய நிலைமை ஏற்படாது என்பதை நாம் உறுதியாகக் கூறுகின்றோம்.
ஒருவேளை அவ்வாறானதொரு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானால், இலங்கையில் தற்போது இயங்கி வரும் சீனாவின் 'சினோபெக்' நிறுவனம் ஊடாக அந்த நிலைமையை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவின் அடிப்படையில், எந்தவொரு சவாலான சந்தர்ப்பத்திலும் இலங்கைக்குத் துணைநிற்பதில் சீனா உறுதியாக உள்ளது.
எனவே, எரிபொருள் விநியோகம் தொடர்பில் நாட்டு மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை" என்றார்.
இலங்கைக்கு துணை நிற்கும் சீனா! எரிபொருள் விநியோகம் குறித்து தூதுவர் விசேட அறிவிப்பு
Previous Post Next Post