Top News

மீண்டும் பாரியளவில் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் விலை..! அநுர அரசின் திட்டம் அம்பலம்

 

சித்திரைப் புத்தாண்டுக்குப் பிறகு எரிபொருள் விலையை மீண்டும் பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய இணைந்த தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் (07.04.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மக்களைச் சுரண்ட அரசாங்கம் இடமளித்துள்ளது.


முந்தைய அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்தை விமர்சித்தவர்கள், தற்போது அதைவிட மோசமான மறைமுக சுரண்டலை மேற்கொள்கின்றனர். ஒரு லீட்டர் எரிபொருளில் சுமார் 165 ரூபாய் வரி அறவிடப்படுகிறது.


லாப்ஃஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் ஒரு சிலிண்டரில் 1300 முதல் 1700 ரூபாய் வரை அதிக லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டுள்ளது. பழைய கையிருப்புகளை வைத்துக்கொண்டு மூன்று முறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 6600 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிட்டு, ஐ.ஓ.சி உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் 20 வீதம் லாபம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். 

Previous Post Next Post