நாட்டில் உள்ள பாடசாலைகளுக்கு சற்றுமுன் வெளியான மகிழ்ச்சித்தகவல்
இலங்கையில் உள்ள பாடசாலை விடுதிகளில் பழுதடைந்த நிலையில் காணப்படும் 126 விடுதிக் கட்டிடங்களை நவீனமயமாக்குவதற்கான விசேட கருத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், குறித்த விடுதிகளின் அத்தியாவசிய வசதிகளை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, 1,008 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில், 2026-2028 காலப்பகுதியில் இப்பாடசாலை விடுதிகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.
