TAMIL VIRAL MEDIA

சற்றுமுன் அரச ஊழியர்களுக்கு வெளியான அறிவிப்பு

 

 சிங்கள மற்றும் தமிழ் மொழிகளைப் படித்த ஊழியர்கள் அதனை பணிகளில் பயன்படுத்துவது குறித்து ஒரு பின்தொடர் பொறிமுறையை நடைமுறைப்படுத்துமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அரச ஊழியர்களுக்கு அறிவுத்தியுள்ளார்.


தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (NILET) அதிகாரிகளுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய மொழிகளைக் கற்கும் அரச ஊழியர்களின் திறன்கள் தொடர்ந்து பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்கள் வழக்கமான முன்னேற்ற மதிப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்ற அரசு ஊழியர்கள், தங்கள் பணிகளில் அத்திறன்களை உண்மையில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை மதிப்பிடுவதற்காக, மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பின்தொடர் செயல்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்