தொடர் விடுமுறை சற்றுமுன் அமைச்சரவை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் மே 30 அன்று வெசாக் பௌர்ணமி தினத்தை கொண்டாடுமாறு அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று(22.4.2026) நடைபெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மே 27 முதல் ஜூன் 2 வரை வெசாக் வாரத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, வெசாக் பௌர்ணமி தினத்தைத் தொடர்ந்து வரும் மே 31 ஆம் திகதி பொது விடுமுறையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சகம் வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.