TAMIL VIRAL MEDIA

எரிபொருளுக்கான QR முறை நீக்கப்படுகிறதா-சற்று முன் வெளியான அறிவிப்பு

 

எரிபொருள் விநியோகத்தின் போது QR குறியீட்டைப் பயன்படுத்துவதை நீக்குவது தொடர்பில் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதன் தலைவர் டி. ஜே. ராஜகருணா, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த வேகத்திற்கு இணையாக விலை குறையவில்லை என்று கூறினார். இதேவேளை, எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மேலும் எந்தவித தடைகளும் இல்லை எனவும் டி. ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.